@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!




மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து தான் இதை உறுதி செய்வார்கள்.


ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும். திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், 'வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும்.

மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும்.

மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக்கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும்.

மெனோபாஸின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைத் தடுக்க...

ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக விட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கிச் சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாறுடன் சம பங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன், அருந்த வேண்டும்.

மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும்.

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

விந்தணு குறைபாட்டை போக்க

விந்தணு குறைபாட்டை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!!

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன.

எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்துவமுறைகளை பின்பற்றுங்களேன்.

சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும்.

பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும்.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட.

அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனை வியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கி யம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார் கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றிஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரி க்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல் செய்து (stimulate)உணர்வெளுச்சியையும், இன்பத் தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் ப ண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுயஇன்பம் என்கி றோம்.

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

இது தப்பான காரியம் அல் ல என்பதை மேலே சொன் னோம். ஆயி னும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடை யாளங் காணுங்கள்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனி மை, பொழுது போக்கின்மை, போன்றவை அணு காமல் தவிருங்கள்.

சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையு ங்கள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம், இசை வாத் தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலு த்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்ற வை உடலுக்கும் உள்ளத் திற்கும் நல த்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.

ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவ து உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
அச்சம் வேண்டாம் எல்லாநோய்க்கும் தீர்வு உண்டு
1) வாத ஆண்குறி நோய்.
இந்நோயின் அறிகுறிகளும்
அடையாளங்களும் :
1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும்.
2.அரிப்பு,
3.எரிச்சல்,
4.குருகுருப்பு,
5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும்.
6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும்.
7.விஷக்கடியால் ஏற்பட்ட நோய் போன்று தோன்றும்.
8.உடல் அழகுக் கெட்டு தேகம் நலிந்து மெலிந்துவிடும்.

2) பித்த ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி சிவந்து காணும்.
2.குறி வீக்கத்துடன்,கடுப்பு,காய்ச்சல் தோன்றும்,
3.உடலுறவில் மிகுந்த ஆசை எழும்,
4.இந்நோய் மாறுவது கடினம்.
மருந்துகள் செய்து கொடுத்தாலும் இந்த நோய் தீருவது கடினம். சில் விஷம் போல் உடலில் உணர்வு தோன்றும்.

3) சிலேத்தும ஆண்குறி.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி தடித்து கனத்து மினு மினுப்புடன் வீங்கி காணும்.
2.விதைப் பைகள் வீக்கத்துடன் காணும்,
3.ஊரல் ,சொறி ஏற்படுவதுடன் இருமல் காணும்.
4.வயிறு பொருமல்,பரு,பிளவை எழும்.
5.உடலில் விஷம் ஏறினால் போல பல குணங்களை காட்டும்.

4) திரி தோஷ ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் வாதம் தங்கி நாளுக்கு நாள் இரணமுடன் வீக்கம் தோன்றும்.
2.புண் ஏற்பட்டாற்போல் சிவப்பேறிக்காணும்.
3.அதிக வேதனை காண்பதுடன் சீதம் மிக எழும்
4.விம்மும் தன்மை உடைய நரம்புகள் அடங்கி போகும்.
5.அண்டமும் (விதை கொட்டை )மிக வீங்கும்.

5) இரத்த ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி சிவந்து காணும்.
2.எந்நேரமும் வேதனை தோன்றும்.
3.உடலில் அதிக சுரம் காயும்.
4.தேன் போல் கழிச்சல் மிகுந்து வெளியாகும்.
5.எப்போதும் உடலில் எரிச்சல் இருந்து வரும்.
6.நினைவு தடுமாறி வேதனை அடைவர்.

6) அரிசிக்கல் ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் பல நோய்களை கிளப்பும்.
2.ஆண்குறியிலும்,உடலிலும்,நமைச்சல் தோன்றும்.
3.மூல நோயை ஏற்படுத்தும்.
4.உடல் பொருமிக் காணப்படும்.
5.வியர்வையுடன் ரத்தம் பொங்கும்.
6.சுக்கிலம் கெட்டுவிடும்.

7) சிலேற்பனத்தில் இரத்த ஆண்குறி நோய் .

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.கண்களில் பல நோய்களை உண்டாக்கும்.
2.ஆண்குறியில் கடுகு போல் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு அதில் இரத்தமும்,வியர்வையும்,கலந்து காணப்படும்.
3.காந்தலும் தோன்றும்.
4.சில் விஷம் கொண்டதுபோல் உடல் அரிப்பு எழும்.

8) சல ரோக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் நீளமகா தடிப்புடன் முளை போன்ற கொப்பளங்கள் அதிகம் உண்டாகும்.
2.அந்த கொப்பளங்களிலிருந்து, சீழும், இரத்தமும் கலந்து வெளியா கும்.
3.அரிப்புடன் எரிச்சலும் காணும்.
4.உடலில் சீதளம் மிகுந்து காணப்படும்.
5.ரோமத்தில் சிலிர்ப்பு எழும்.

9) பித்த இரத்த ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
ஆண்குறி வீங்கும், இலந்தை விதைபோல் தோற்றமளித்து வெடித் து, மாமிசத்தை பெருக்கி சில்விஷம் போல் நோயை அதிகப்படுத்து ம்.

10) மேக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.கப ரோகம்,இரத்த ரோகம்,போன்ற நோய்கள் எழும்,
2.குட்டமும்,மேகமும் எழும்.
3.ஆண்குறியில் புண்ணும்,தணப்புடன் சீழும் வடியும்.
4.பொருமலும் உண்டாகும்.

11) எரிவு ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறு நீரில் தோன்றும்.
2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.
3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.
4.மயக்கம்,
5.சோபதாபம்,
6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.
இன் நோயுடையவர் பிழைப்பது கடினம்.

12) பிடக ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும், பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.
2. மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர் வையும் ஏற்படும்.

13) தாமரைக் காய் ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. தாமரைக் காய் ஆண்குறி நோய் ஏற்பட்டால் ஆண்குறி தமரை காய் போல் தடித்து அதில் கொப்பளங்கள் தோன்றி வெடித்து சீழும் இரத்தமும் கலந்து கசியும்.
2. சில்விஷத்தால் விளைந்ததுபோல் தோற்றமுரும். கொடுமையா ன பல நோய்கள் இதனால் உண்டாகும்.

14) விரலாண் குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
விரலாண் குறி நோய் தோன்றினால்
1. ஆண்குறியில் விரலைப் போலவும்,
2. புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
3. மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு)மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
4. உடலும் இரணம் போலாகும்.

15) அழிவு ஆண் குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
2. இரணத்திலிருந்து சீழ் பாயும்.
3. எரிச்சலும் உண்டாகும்.
4. உடல் வேதனை யுறும்.
5. சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
6. கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்

16) கல்லாண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளி வரும்.
2. மலை போல் சிறு வெளியாகும்.
3. கல்போல் வீக்கம் ஏற்படும்.

17) பிளவை ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. பித்தமுடன் வாதமும்கூடி (தொந்தித்து) ஏற்படும் சிலேற்பனத்தா ல் ஆண்குறியில் பிளவை தோன்றும்.
2. இந்த நோய் ஏற்பட உடல் தடிக்கும்.சீதளமும் அதிகரிக்கும்.
3. பிளவை ஆண்குறி நோய் கொண்டவர் பகல் தூக்கம் அதிகம் விரும்புவர்.
4. இக்குணங்கள் காணப்படின் பிளவை ஆண்குறி நோய் என்று அறியவும்.

18) தோல் தடை ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. தோல் தடை ஆண்குறி நோய் ஏற்பட்டால் உடல் நைந்து வரும்.
2. ஆண்குறி மலர் வீங்கி,துவாரம் அடைபடும்.
3. இதனால் சிறுநீர் சதா கட்டுப்பட்டு வேதனை தோன்றும்.

19) முள்ளிலாண் குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் கொப்பளங்கள் அதிகம் தோன்றும்.
2. எப்பொழுதும் உடல் அனலாகக் காயும்.
3. கட்டிகள் தோன்றி கோசம் வீக்க முறும்.
4. நீர்த்தாரையில் குத்தல் காணும்.
5. உடல் வேதனை தரும்.
இந்நோய் ஏற்பட்டால் தீருவது கடினம்.

20) தம்பன ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறி பளபளப்புடன் கடுஞ் சிவப்பு நிறமாக மாறும்.
2. ஆண்குறி மொக்கில்வேதனை ஏற்படும்.
3. சுக்கிலம் கசியும்.
4. ரண நாற்றம் வீசும்.
5. சில் விஷம் கொண்டதுபோல குறிகள் காணும்.

21) எரியவு ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறி துவாரம் பெரிதாகும்.
2. எப்போதும் எரிச்சல் தோன்றுவதோடு சோபதாபம் கொள்வர்.
3. கட்டிகள் அதிகமாகப் புடைத்து வேதனையும், தணப்பும் உண்டாகு ம்.
4. சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
5. சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாகும்.
6. சிறுநீர் அடிக்கடி போகும்.
7. ஆண்குறியும் விம்மும்.
8. இறுதியில் காச நோயில் கொண்டு சேர்க்கும்.

22) சுர ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. இரத்தம் பெருகி கசியும்.
2. ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
3. குறியின் சருமம் பளபளப்புடன் பழுத்து நைந்து காணும்.
4. இக்கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
5. ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
6. சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.

23) சதை வளர்த்தி ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. நரம்புகளில் மிகுந்த வேதனை தோன்றும்.
2. ஆண்குறியின் முனை மலரை நைய செய்யும்.
3. சருமத்தை பெருக்க செய்யும்.
4. சில் விஷம் உடலில் ஏறுவதை போன்ற குணங்கள் தோன்றும்.
5. நரம்புகள் தளர்ச்சியுறும்.
6. நடக்க இயலாது.
7. ஆண்குறியில் சதை மிக வளர்ந்திருப்பின் இந்நோய் அசாத்தியம் ஆகும்.

24) தோட பேத ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் மிளகு போல் கறுப்பு நிறத்தில் சதை தோன்றும்.
2. வெடித்து துர்நாற்றமுடன் புண்ணுண்டாகும்.
3. கட்டிகள், கொப்பளங்கள் ஏற்பட்டு சில்விஷம்போன்ற குணங்க ளை தோற்று விக்கும்.

25) நரம்பு வித்திர ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. திரிதோஷ குற்றத்தால் ஆண்குறி நரம்புகளில் நீர் கோர்க்கும்.
2. குறியை சுற்றிலும் வீக்கம் காணும்.
3. இரத்தம் சிறுநீருடன் கலந்து வெளியேறும்.
4. மேலும் ஆண்குறியில் கட்டிகள் அதிகம் உண்டாகி அதிலிருந்து சீழும் இரத்தமும் வடியும்.
5. நரம்பு வலி சூடு ஏறி அதிகப்படும்